மே 3ம் தேதியன்று அரசு பொது விடுமுறை அறிவிப்பு – முழு விபரங்கள் இதோ!
நாடு முழுவதும், ஈத்-அல்-பித்ர் பண்டிகையை கொண்டாடுவதற்காக மே 3ம் தேதியன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளித்து கென்யா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
பொது விடுமுறை
கென்யா நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது புனித பண்டிகையான ஈத்-அல்-பித்ரை கொண்டாடுவதற்காக அரசு ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளித்துள்ளது. இது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சரவை செயலர் ஃபிரெட் மதியாங்கி, ‘தேசிய அரசாங்கத்தின் உள்துறை மற்றும் ஒருங்கிணைப்புக்கான அமைச்சரவை செயலாளர், பொது விடுமுறைகள் சட்டத்தின் பிரிவு 2 (1) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி மே 3 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று பொது விடுமுறை அறிவிக்கிறார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – அரசு அதிரடி உத்தரவு!
அதன்படி, ரம்ஜான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஈத்-உல்-பித்ரைக் கொண்டாட மே 3 செவ்வாய்க்கிழமை அன்று பொது விடுமுறை கடைபிடிக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் கென்யாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மே 3 ஆம் தேதி இத்-உல்-பித்ரைக் குறிக்கும் பொது விடுமுறையாக இருக்கும். இப்போது இஸ்லாமிய மக்கள் தங்கள் புனித நாளுக்கான 29 அல்லது 30 நாட்கள் உண்ணாவிரதத்தை முடிக்க இந்த விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் கடந்த வெள்ளியன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த கென்யாவின் முன்னாள் ஜனாதிபதி மவாய் கிபாகியின் நினைவாக, கென்ய மக்கள் அனைவரும் அரசு சார்பில் சாத்தப்படும் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் வாய்ப்பை ஏப்ரல் 29 ஆம் தேதி பொது மக்களுக்கு வழங்குமாறு உள்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கு நாளை (ஏப்ரல்.29) நயாயோ தேசிய மைதானத்தில் வைத்து நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.