தமிழகத்தில் நாளை (மே 20) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 124 வது மலர் கண்காட்சி மே 20ம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்று 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில் பல வகையான வண்ண மலர்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்படும். குறிப்பாக கோடை காலத்தில் இங்கு மிதமான காலநிலை நிலவுவதால் கோடை வெயிலில் இருந்து விடுதலை பெற பிற மாவட்டங்களில் இருந்து மக்கள் ஊட்டிக்கு வருகை புரிவர். மேலும் சுற்றுலா பயணிகளுக்காக மலர் கண்காட்சி, படகு போட்டி, படகு அலங்காரம், குன்னூரில் பழக்கண்காட்சி போன்றவை நடைபெறும். இதில் மலர் கண்காட்சி மிகவும் பிரபலமானது.
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக மலர் கண்காட்சி நடைபெறவில்லை. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் 2022ம் ஆண்டு மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சி நாளை (மே 20) தொடங்கவுள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த மலர் கண்காட்சியானது மே 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மலர் கண்காட்சி தொடங்க உள்ள மே 20ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த விடுமுறை தினத்தில் மாவட்டத்தில் கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் பிற அலுவலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வண்ணம் ஜூன் 4ம் தேதி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.