தமிழக முழுவதும் மார்ச் 4 பொது விடுமுறை அறிவிப்பு – முதல்வரிடம் கோரிக்கை!
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க போராடிய அய்யா வைகுண்டர் உதய தினமான மாசி மாதம் 20 ஆம் தேதி ( மார்ச் 4) தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என சாமிதோப்பு பாலஜனாதிபதி மனு அளித்திருக்கிறார்.
பொதுவிடுமுறை விடுமுறை:
பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஜாதிக் கொடுமைகள் அதிகமாக இருந்தது. முக்கியமாக தென் இந்தியாவில் கன்யாகுமரி மற்றும் கேரளப் பகுதிகளான திருவனந்தபுரம், திருவான்கூர் போன்ற மக்களிடம் பல வேறுபாடுகள் காணப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மக்களுக்கு பல உரிமைகள்மறுக்கப்பட்டனர். உயர் ஜாதியினர் முன்னால் தாழ்ந்த ஜாதியினர் செருப்பு அணியக் கூடாது, உடையிலும் பல கட்டுப்பாடுகள் இருந்தது.
பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்று – தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்?
இந்நிலையில் அவர் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க போராடினார். அதனால் அவரது உதய தினமான மாசி மாதம் 20 ஆம் தேதி ( மார்ச் 4) தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை விட வேண்டும் என சாமிதோப்பு பாலஜனாதிபதி கனிமொழி எம்பியிடம் மனு அளித்து இருந்தார். அதில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுத்து தாழக்கிடப்பாரை “தற்காப்பதுவே தாமம்” என்ற நிலையில் அனைத்து சாதி மக்களை ஒன்றிணைத்தார். தீண்டாமை என்னும் தீதை அகற்ற தொட்டு நாமமீதும் நிலையை உருவாக்கினார்.
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தினசரி நடைபெறும் சேவைகளின் விபரம்!
ஆண்கள் தலையில் தலைப்பாகையுடன் வழிபட அனுமதித்து ஆண்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபித்தார். அய்யா வைகுண்டருக்கு கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் தலைமைப்பதி அமைத்துள்ளது. சென்னை கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் அய்யா வழிபாட்டு தலங்கள் உள்ளன. ஏற்கனவே அய்யா வைகுண்டர் உதய தினமான மாசி மாதம் 20 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதே போல மாநிலம் முழுவதும் விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.