மாநிலம் முழுவதும் பிப்.14 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
கோவாவில் வரும் 14ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அன்றய பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உள்ளூர் விடுமுறை:
இந்தியாவில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் தமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது உத்திர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இதனையடுத்து பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுஉத்தரவு வரும் வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!
மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும், மார்ச் 3ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது. உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் மட்டும் ஒரே கட்டமாக பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து மேற்கண்ட 5 மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
TCS நிறுவனத்தில் மாதம் ரூ.58,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – முழு விபரம் இதோ!
சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் நடைபெற போகும் மாநிலங்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதே போல தற்போது கோவாவில் பிப்ரவரி 14ம் தேதி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தேர்தல் நடைபெற உள்ள . உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் உள்ளூர் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.