தமிழகத்தில் நாளை (டிச.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் விழாவை பொதுமக்கள் பாதுகாப்புடன் கொண்டாடுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கிறிஸ்துமஸ் விழா ஆண்டுதோறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பெருநோய் தொற்று காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்கள் திறப்பதற்கும், திருவிழாக்கள் நடைபெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். அதனை தொடர்ந்து அனைத்து கோவிலும் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து திருவிழாக்கள் கொண்டாடுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? இன்று பிரதமர் ஆலோசனை! ஓமைக்ரான் பரவல் எதிரொலி!
இதனை தொடர்ந்து வருகிற 25 ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் கிறிஸ்துமஸ் விழாவை பொதுமக்கள் பாதுகாப்புடன் கொண்டாடுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த நாளில் கிறிஸ்துமஸ் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைப்பார்கள், கிறிஸ்துமஸ் மரத்தை அழகுபடுத்துவார்கள் மற்றும் சிறப்பு பிரார்த்தனை செய்வார்கள்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை – ஆசிரியர் கழகம் நற்செய்தி!
இந்த கிறிஸ்துமஸ் விழா ஆண்டுதோறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை கிறிஸ்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் விதமாக நாளை (டிச.24) அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என்று கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக ஜனவரி மாதத்தின் 2வது சனிக்கிழமை அதாவது 8 ஆம் தேதி அன்று வேலை நாளாகும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.