அரசு சமூக பாதுகாப்பு துறையில் ரூ.35,000/- ஊதியத்தில் DEO வேலைவாய்ப்பு 2021..!
தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் Consultant, Social Worker, DEO பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாகவும், அதனை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தூத்துக்குடி மாவட்ட சமூக பாதுகாப்பு துறை அலுவலகத்தில் Consultant, Social Worker, DEO பணிகளுக்கு தலா ஒரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- பதிவு செய்வோர் 01.01.2022 தேதியில் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Postgraduate Degree பட்டம் முடித்திருக்க வேண்டும். DEO பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
- District Consultant பணிக்கு ரூ.35,000/-, Social Worker பணிக்கு ரூ.13,000/-, Data Entry Operator பணிக்கு ரூ.10,000/-மும் மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
- பதிவு செய்வோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 24.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.