தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை – ஆசிரியர் கழகம் நற்செய்தி!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து சாதகமான செய்தி வெளியாகும் என்று தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. வெகு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பாட சுமையை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 2022 மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறலாம் என்ற தகவலும் வந்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை? ஊழியர்கள் முக்கிய கோரிக்கை!
ஆண்டுதோறும் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் அரையாண்டு தேர்வுக்கு பதில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 17ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற தொடங்கியது. இந்த தேர்வுகள் நாளையுடன் முடிவடைய உள்ளது. எப்போதும் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வு முடிவடையும் போது ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு ஜனவரி மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு – மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்!
அதே போல நடப்பாண்டும் விடுமுறை அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. நாளையுடன் திருப்புதல் தேர்வு முடிவடையும் நிலையில் விடுமுறை குறித்து சாதகமான செய்தி வெளியாகும் என்று தமிழ்நாடு பள்ளி ஆசிரியர் கூட்டணி தகவல் தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வி ஆணையர் திருநெல்வேலி மாவட்ட கல்வி மாநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அரையாண்டு தேர்வு விடுமுறை பற்றி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பேசி இருக்கிறார். அதனால் நாளை அல்லது நாளை மறுநாள் இது குறித்த செய்தி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது.