தமிழகத்தில் 2ம் நாளாக தொடரும் பொது விடுமுறை அறிவிப்பு – 4 மாவட்ட கனமழை எதிரொலி!
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு இன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை:
தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குடியிருப்புகள் அனைத்தும் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ள நிலையில் மக்கள் வெள்ள நீரில் தத்தளித்து வருகின்றனர். இதனால் நேற்று கனமழை காரணமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வரை கனமழை நீடித்து வருவதால் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஜெட் வேகத்தில் எகிறிய தங்கத்தின் விலை – சவரன் ரூ.46,360க்கு விற்பனை!!
இதன் காரணமாக, கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நான்கு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டு உள்ளதால் நாளை வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தின் வாயிலாக எச்சரிக்கை அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.