அனைத்து அரசு ஊழியர்களுக்கும் டிசம்பர் 27 அன்று பொது விடுமுறை அறிவிப்பு – உத்தரவு வெளியீடு!
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் 14வது நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சிந்து மாகாண அரசு டிசம்பர் 27ஆம் தேதியன்று பொது விடுமுறையை அறிவித்துள்ளது.
பொது விடுமுறை
உலகமெங்கிலும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் தற்போது வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஒமிக்ரான் தொற்று பரவக்கூடும் என்பதால் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் இவ்வகை ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது.
மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட தடை! அரசு உத்தரவு!
இதன் காரணமாக அந்நாட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானின் சிந்து மாகாண அரசு, வரும் 27ம் தேதியன்று பொது விடுமுறையை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் 14வது நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சிந்து மாகாண அரசு டிசம்பர் 27ஆம் தேதியன்று பொது விடுமுறையை அறிவித்துள்ளது.
இந்தியாவில் தீவிரமடையும் ஓமைக்ரான் பரவல் – 236 பேருக்கு தொற்று உறுதி! பொதுமக்கள் அச்சம்!
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், ‘அத்தியாவசிய சேவைகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவை தவிர மற்ற அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள் மற்றும் மாகாண அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் உள்ளூராட்சி மன்றங்கள் டிசம்பர் 27 அன்று மூடப்பட்டிருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) டிசம்பர் 27 அன்று கர்ஹி குடா பக்ஷ் பூட்டோவில் பெனாசிர் பூட்டோவின் 14 வது நினைவு நாளில் ஒரு பெரிய பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.