இந்தியாவில் தீவிரமடையும் ஓமைக்ரான் பரவல் – 236 பேருக்கு தொற்று உறுதி! பொதுமக்கள் அச்சம்!

0
இந்தியாவில் தீவிரமடையும் ஓமைக்ரான் பரவல் - 236 பேருக்கு தொற்று உறுதி! பொதுமக்கள் அச்சம்!
இந்தியாவில் தீவிரமடையும் ஓமைக்ரான் பரவல் - 236 பேருக்கு தொற்று உறுதி! பொதுமக்கள் அச்சம்!
இந்தியாவில் தீவிரமடையும் ஓமைக்ரான் பரவல் – 236 பேருக்கு தொற்று உறுதி! பொதுமக்கள் அச்சம்!

ஓமைக்ரான் தொற்று இந்தியாவில் அதிக அளவில் பரவி வரும் நிலையில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக தொற்று:

இந்தியா முழுவதும் கொரோனா பரவல், அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மூலம் கட்டுக்குள் வந்த நிலையில் ஓமைக்ரான் என்ற மாறுபாடு அடைந்த வைரஸ் வெளிநாட்டு பயணி மூலம் மறுபடியும் இந்தியாவில் பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸை விட 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது ஒமைக்ரான். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் ஓமைக்ரான் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மறந்து விட்டு கடை வீதிகளில் கூட்டம் கூடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? இன்று பிரதமர் ஆலோசனை! ஓமைக்ரான் பரவல் எதிரொலி!

இதன் விளைவாக தொற்று அதிகமாக இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. ஓமைக்ரான் பாதிப்பு புள்ளிவிவர பட்டியலின் அடிப்படையில் இந்தியாவில் 236 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தற்போது 104 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளதாகவும் மற்றும் 132 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அதிக அளவில் மகாராஷ்டிராவில் 65 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உள்ளது. ஓமைக்ரான் பாதித்த மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா தான்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை – ஆசிரியர் கழகம் நற்செய்தி!

இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் தொற்று தீவிரமடையும் வகையில் டெல்லியில் 64 பேர், தெலுங்கானா 24, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 21, கேரளா 15, குஜராத் 14, ஜம்மு – காஷ்மீர் 3, ஒடிசா 3, உத்தரப் பிரதேசம் 2, ஆந்திரப் பிரதேசம் 2, ஒடிசா 2 , சண்டிகர், தமிழகம், லடாக், உத்தராகண்ட், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஓமைக்ரான் பரவ தொடங்கி உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!