தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து – கல்வித்துறை ஆலோசனை!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து - கல்வித்துறை ஆலோசனை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து - கல்வித்துறை ஆலோசனை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து – கல்வித்துறை ஆலோசனை!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுக்கு முக்கியத்துவம் தர வேண்டியுள்ளதால் 11 ஆம் வகுப்பு பொது தேர்வை இந்த ஆண்டு மட்டும் ரத்து செய்வது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகளுக்கு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேரடி வகுப்புகளை நடத்த முடியாத சூழல் உருவானதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தினசரி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் 2021 ஜனவரி மாதம் ஓரளவு பாதிப்புகள் குறைந்த நிலையில் பள்ளிகளை திறப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டு பொதுத் தேர்வுகளை நடத்தும் நோக்கில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த நேரத்தில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடியதால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் ஆப் அறிமுகம்!

கொரோனா இரண்டாம் அலை குறைந்ததும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தொடர்ந்து மேலும் அதிகரித்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதனை அடிப்படையாக வைத்து அடுத்த வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. தற்போது வெகு நாட்கள் விடுமுறைகளுக்கு பின்பு பிப்ரவரி 1 முதல் தமிழகம் முழுவதும் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 11ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது.

மாநிலம் முழுவதும் மீண்டும் அமலாகும் ஞாயிறு முழு ஊரடங்கு – அரசு உத்தரவு!

பிளஸ் 2 மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட முக்கிய பாடங்களை முடிக்கவே குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் 12ம் வகுப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கான பாடத்திட்டம் இன்னும் வெளியிடப்படவில்லை . மேலும் தற்போது 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் தேர்வு எழுதவில்லை ஆல் பாஸ் பெற்றுள்ளனர். தொடர்ந்து 3 ஆண்டுகளாக தேர்வு எழுதாத நிலையில் தற்போது திடீரென தேர்வு நடத்தினால் மாணவர்கள் தேர்ச்சி மதிப்பெண் பெற முடியாத நிலை ஏற்படும். அதனால் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து அரசு தேர்வு துறை வளாகத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கல்வியாளர்கள் இடம்பெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!