அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் ஆப் அறிமுகம்!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தற்போது ஒரே ரேஷன் திட்டம் மூலமாக தமிழகத்தில் வசிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்று கொண்டு வருகின்றனர். தற்போது இத்திட்டத்தின் கீழ் ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேரா ரேஷன்
இந்தியா முழுவதும் உள்ள இடம்பெரும் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை பெறுவதற்காக ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக 1 கிலோ அரிசியை 3 ரூபாய்க்கும் மற்றும் 1 கிலோ கோதுமையை 2 ரூபாய்க்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த முன்னுரிமை கார்டுதாரர்கள் பெற்று கொள்ள முடியும்.
மாநிலம் முழுவதும் மீண்டும் அமலாகும் ஞாயிறு முழு ஊரடங்கு – அரசு உத்தரவு!
இதே போன்று பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த கார்டுதாரர்களும் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். தற்போது இத்திட்டத்திற்காக ‘மேரா ரேஷன்’ எனப்படும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக ரேஷன் கார்டு இல்லாத சூழலில் இதனை பயன்படுத்தி சுலபமான முறையில் ரேஷன் பொருட்களை பெற முடியும். தமிழகத்தில் அதிகமான அளவு பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருவதால் இந்த செயலியை பற்றி விழிப்புணர்வு பல்வேறு வகையில் ஏற்படுத்த வேண்டும் என்று உணவு துறை மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது ‘மேரா ரேஷன்’ என்ற செயலியை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.
1. இதற்கு முதலாவதாக ‘மேரா ரேஷன்’ என்ற செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2. அடுத்ததாக இதில் ரேஷன் கார்டு எண் அல்லது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
3.தற்போது இதில் தங்கள் ரேஷன் கார்டு குறித்த கூடுதல் விவரங்கள் கிடைக்கும்.
4. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இல்லாத சூழலில் மேரா ரேஷன் செயலியில் உள்ள விவரங்களை காண்பித்து கைரேகை பதிவு செய்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.