CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு – பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ பொதுத்தேர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட நிலையில், அதற்கான முடிவுகள் குறித்து தற்போது முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
CBSE பொதுத்தேர்வு:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் இரண்டு பருவங்களாக நடத்துவதற்கு கல்வி வாரியம் திட்டமிட்டது. அதன்படி முதல் பருவ பொதுத்தேர்வு டிசம்பர் மாதத்திலும், 2ம் பருவ பொதுத்தேர்வு ஏப்ரல் மாதத்திலும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்ட்டது. முன்னதாக டிசம்பர் மாதத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி முறையில் முதல் பருவ பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்பட்டது.
தமிழக ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு – கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை!
முதல் பருவ தேர்வின் முடிவுகளை கல்விக்கு வாரியம் அறிவிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தது. பிப்ரவரி 17ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், CBSE செய்தித் தொடர்பாளர் ராம ஷர்மா பிப்ரவரி 17ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாது என்றும், அதற்கான தேதி கல்வித்துறை அதிகாரியால் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். மாணவர்கள் தேர்வுமுடிவுகள் குறித்த அறிவிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் பின்தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் கூறினார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு – விரைவில் ஹாப்பி நியூஸ்!
மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் cbse.gov.in, cbseresults.nic.in அறிந்து கொள்ளலாம். சிபிஎஸ்இ 2ம் பருவ பொதுத்தேர்வுக்கான தேதிகளை அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 26ம் தேதி முதல் நேரடி முறையில் தேர்வுகள் நடத்தப்படும். இதில், சிறு மற்றும் குறு வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். மாணவர்கள் தேர்வு பற்றிய அனைத்து விவரங்களையும் அதிகாரபூர்வ இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.