மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு – விரைவில் ஹாப்பி நியூஸ்!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 – வது ஊதிய குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஹோலி பண்டிகைக்கு முன் அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகை படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டு வாடகைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 31% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு வழங்கியது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 – வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பள உயர்வு, மேலும் 3% அகவிலைப்படி உயர்வு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளை (பிப்.19) விடுமுறை – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
மேலும் பிட்மென்ட் காரணியை 2.57 சதவீதத்திலிருந்து 3.68 சதவீதமாக அதிகரிக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஊதிய குழுவின் பரிந்துரையின் படி ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ட்மென்ட் காரணி 2.57 சதவீதத்திலிருந்து 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால், அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயிலிருந்து 26,000 ரூபாயாக உயரும் அடுத்ததாக அகவிலைப்படி 3% உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடிப்படை சம்பளம் ரூ.18,000 பெறும் நபர் ரூ.6,120 வரை கூடுதல் தொகை பெறுவார்.
தமிழகம் முழுவதும் மார்ச் 4ம் தேதி பொது விடுமுறை – அரசுக்கு வலியுறுத்தல்!
மேலும் 18 மாதமாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகை ஒரே தவணையில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. சுமார் 2 லட்சம் ரூபாய் வரை மொத்தமாக கிடைக்கும். 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தற்போது ஹோலி பண்டிகைக்கு முன் அகவிலைப்படியுடன் சேர்த்து வீட்டு வாடகை படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.