தமிழக ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு – கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க வரும் ரேஷன் அட்டைதாரர்களை தவிர பிற நபர்கள் கடைக்கு முன் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவுத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
ரேஷன் கடை:
தமிழகத்தில் நாளை 38 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள் 3,843 நகராட்சி உறுப்பினர்கள் 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துள்ளது.
இரவு 10 மணி வரை மட்டுமே உணவகங்கள் திறக்க அனுமதி, கூடுதல் தளர்வுகள் அமல் – அரசு உத்தரவு!
வாக்கு பதிவை தொடர்ந்து பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரேஷன் கடைகள் மூலம் அரசியல் கட்சியினர் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்து வருகிறது. மேலும் திமுகவினர் குடும்ப தலைவிக்கு மாதம், ரூ.1,000 உரிமை தொகை வழங்குவதற்கான போலியான விண்ணப்பங்களை ரேஷன் கடை ஊழியர்களிடம் வழங்கி விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
பிப்ரவரி 25ம் தேதி வரை மீண்டும் இரவுநேர ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!
இது போன்ற நிகழ்வுகளை தடுக்க ரேஷன் கடைகளில் அரசியல் பிரமுகர்கள் புகைப்படம் உள்ள போஸ்டர்கள் அல்லது விளம்பர பலகை கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொருட்கள் வாங்க வரும் ரேஷன் அட்டைதாரர்கள் தவிர பிற வெளி நபர்கள் யாரும் கடைக்கு முன்பு கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.