இரவு 10 மணி வரை மட்டுமே உணவகங்கள் திறக்க அனுமதி, கூடுதல் தளர்வுகள் அமல் – அரசு உத்தரவு!
தென் கொரியா நாட்டில் தற்போதுள்ள கொரோனா தொற்றின் நிலைமையை ஆய்வு செய்த அரசு, கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் மீதான கட்டுப்பாடுகளை ஒரு மணி நேரம் மட்டும் தளர்த்த முடிவு செய்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ஊரடங்கு தளர்வுகள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா தொற்றுநோய் சூழலுக்கு மத்தியில் தென் கொரியாவில் முதல் முறையாக தினசரி வைரஸ் பாதிப்புகள் 1,00,000 ஐ தாண்டி இருக்கிறது. இந்த புதிய பாதிப்புகளில் தீவிரமான எழுச்சிகள் இருந்த போதிலும் ஊரடங்கு கட்டுப்பாடு தொடர்புடைய நடவடிக்கைகளில் இருந்து அரசு தளர்வுகளை அளித்துள்ளது. அந்த வகையில் அரசு கஃபேக்கள் மற்றும் உணவகங்களில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவை இரவு 10 மணி வரை தளர்த்திய அரசு சேவைகளை தொடர அனுமதி அளித்துள்ளது.
பிப்ரவரி 25ம் தேதி வரை மீண்டும் இரவுநேர ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!
அதாவது, தென் கொரியாவில் சிறு வணிகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களிடயே ஏற்பட்டுள்ள பின்னடைவை கருத்தில் கொண்டு உணவகங்களை திறக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுப்பிக்கப்பட்ட இந்த வைரஸ் தடுப்பு கட்டுப்பாடுகள் நாளை (பிப்.19) முதல் மார்ச் 13 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனி இடங்களில் கூடும் நபர்களின் எண்ணிக்கையை எட்டாக உயர்த்த அதிகாரிகள், அரசுக்கு பரிசீலித்ததாக கூறப்படுகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளை (பிப்.19) விடுமுறை – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
ஆனால் ஒமிக்ரான் மாறுபாட்டுடன் கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைந்து வருவதால் தற்போதைய அளவை பராமரிக்க முடிவு செய்ததாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இது தவிர 12 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான தடுப்பூசி பாஸ் முறையை விரிவுபடுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செயல்பாட்டை துவங்க இன்னும் ஒரு மாதத்திற்கு அதாவது ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் கிம் பூ-கியூம் குறிப்பிட்டுள்ளார்.