பிப்ரவரி 25ம் தேதி வரை மீண்டும் இரவுநேர ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!

0
பிப்ரவரி 25ம் தேதி வரை மீண்டும் இரவுநேர ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் உத்தரவு!
பிப்ரவரி 25ம் தேதி வரை மீண்டும் இரவுநேர ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் உத்தரவு!
பிப்ரவரி 25ம் தேதி வரை மீண்டும் இரவுநேர ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் வதோதரா ஆகிய இரண்டு நகரங்களில் மட்டும் பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 25 வரை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார்.

இரவு ஊரடங்கு நீட்டிப்பு:

குஜராத் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை நிலவரப்படி 884 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 13 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் குஜராத் மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,18,212 ஆகவும், தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 10,851 ஆகவும் உள்ளது. முதலில் கொரோனா பாதிப்புகள் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வந்த நாட்களில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு – விரைவில் ஹாப்பி நியூஸ்!

அதன்பின்னர் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைய தொடங்கியது. இதனால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்க தொடங்கியது. கல்வி நிலையங்கள் நோய் தொற்று பாதிப்பினால் மூடப்பட்டிருந்த நிலையில், அரசு அறிவிப்பின் படி கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. முன்னதாக நோய் தொற்று அதிகமாக இருந்த அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர், ஜுனாகத் மற்றும் காந்திநகர் ஆகிய எட்டு நகரங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்திருந்தது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளை (பிப்.19) விடுமுறை – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

தற்போது இரவு ஊரடங்கு உத்தரவு கொரோனா வைரஸிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காந்திநகரில் நடந்த கொரோனா வைரஸ் ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் பூபேந்திர படேல் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அகமதாபாத் மற்றும் வதோதரா ஆகிய இரண்டு நகரங்களில் மட்டும் பிப்ரவரி 18ம் தேதியான இன்று முதல் பிப்ரவரி 25 வரை ள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று நேற்று இரவு முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்தார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!