தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

0
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் இந்த ஆண்டில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமான முறையில் பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொதுத்தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் ஓமைக்ரான் தொற்று பரவலும் வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை மேலும் அதிகரிக்காமல் இருக்க மருத்துவ நிபுணர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனைகளை மேற்கொண்டார்

ஐடி துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி 1 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீண்டும் மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர்கள் மிகுந்த கவலையுடன் இருக்கின்றனர். அத்துடன் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கட்டாயமாக நேரடி முறையில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு துறையில் 12ம் முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 57 ஆயிரம் சம்பளம்!முழு விவரம் இதோ!

இதற்கான பணிகளை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் ஜனவரி 19ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என்று அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இணையதளம் மூலமாக பதிவேற்றுவதால் பல்வேறு சிரமங்கள் இருப்பதால் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வேண்டுகோள் வைத்தனர். அதனால் ஜனவரி 31ம் தேதி வரை கூடுதல் அவகாசத்தை அரசு வழங்கியுள்ளது. இது தான் கடைசி வாய்ப்பு என்றும் மேலும் இது போன்ற கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!