ஐடி துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

0
ஐடி துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
ஐடி துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
ஐடி துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

தொற்று நோய் பரவல் காலத்தில் ஐ டி துறையில் பணியாளர்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஐடி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஊழியர்களை பெரு நகரங்களில் இருந்து தேடுவதை தவிர சாதாரண நகரங்களில் இருந்தும் பணியமர்த்தி வருகின்றன.

ஐடி துறை வேலைவாய்ப்பு:

2020 வரை வேலை தேடும் பட்டதாரிகள் தங்கள் பணி வைப்புகளுக்காக பெரிய மெட்ரோ நகரங்களை நோக்கி படை எடுத்து வந்தனர். ஆனால் கொரோனா நோய் பரவல் தொடங்கியதால் ஐடி நிறுவனங்கள் அதிக அளவிலான பணியாளர்களை வீட்டில் இருந்து பணி செய்வதை ஊக்குவித்து வருவதால் அதிக திறமையானவர்களை பணியமர்த்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மைண்ட்ட்ரீ, எச்சிஎல், டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற ஐடி நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள 2ம் மற்றும் 3ம் நிலை நகரங்களில் இருந்து பணியாளர்களை நியமிக்க உள்ளது.

தமிழக அரசு துறையில் 12ம் முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 57 ஆயிரம் சம்பளம்!முழு விவரம் இதோ!

முக்கிய நகரங்களில் உள்ள அலுவலகங்கள் தவிர, லக்னோ, மதுரை, நாக்பூர் மற்றும் விஜயவாடா ஆகிய இடங்களிலும் இந்நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது. நான்கு சிறிய நகரங்களை உள்ளடக்கிய நிறுவனத்தின் நியூ விஸ்டாஸ் பிரிவின் கீழ் உள்ள நகரங்களில் அதன் பணியாளர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டை விட கிட்டத்தட்ட 43% அதிகரித்துள்ளது. HCL இன் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1.97 லட்சமாக உள்ளது. இரண்டாம் நிலை நகரங்களில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் இருப்பதால், அத்தகைய வளாகங்களில் இருந்து பணியமர்த்துவது தங்களுக்கு உதவியாக இருப்பதாக ஐடி நிறுவனங்கள் கூறுகின்றன.

ரேஷன் கடைகளில் மீண்டும் அமலாகிய திட்டம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

சமீபத்தில், இன்ஃபோசிஸ் இந்த நிதியாண்டிற்கான அதன் உலகளாவிய கல்லூரி பட்டதாரி பணியமர்த்தல் திட்டம் முந்தைய காலாண்டின் எண்ணிக்கையான 45,000 க்கு எதிராக 55,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ராண்ட்ஸ்டாட் டேலண்ட் ட்ரெண்ட்ஸ் அறிக்கையின்படி, 2ம் நிலை நகரங்களில் சண்டிகர், வதோதரா, இந்தூர், கோயம்புத்தூர், கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகியவை தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு மையங்களாக முக்கியத்துவம் பெறுகின்றன. 2ம் நிலை நகரங்களில் 14% ஐடி வேலைகளுடன் வதோதரா முன்னிலை வகிக்கிறது, அதைத் தொடர்ந்து சண்டிகர், ஜெய்ப்பூர், கோயம்புத்தூர் மற்றும் கொச்சி ஆகியவை உள்ளன. அனைத்து நிறுவனங்களும் 2ம் நிலை மற்றும் 3ம் நிலை நகரங்களில் அதிக பணியாளர்களை நியமிக்க ஆர்வம் காட்டி வருகின்றது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!