தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – அரசுத் தேர்வுகள் இயக்கம்!
தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள் அமைப்பதற்கான கருத்துக்களை 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. அது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
வங்கிகளில் Personal Loan வாங்க திட்டமா? 5 லட்ச ரூபாய்க்கான வட்டி விகித விவரம்!
அதனை தொடர்ந்து தற்போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று குறையாத நிலையில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வானது ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
IMPS பண பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு – RBI அறிவிப்பு!
இந்த நிலையில் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள் அமைப்பதற்கான கருத்துக்களை 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கம் உத்தரவிட்டுள்ளது. இதனால் விரைவில் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய கல்வி வாரியம் சார்பில் 10, 12ம் வகுப்புகளுக்கு முதல் பருவத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.