TNPSC Group 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – PSTM சான்றிதழ் குறித்த விளக்கம்!
தமிழகத்தில் கடந்த 21ம் தேதி நடந்து முடிந்த குரூப் 2 ,2A தேர்வில் தமிழ் வழியில் படித்தோருக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழ் வழியில் படித்தோருக்கான (PSTM) சான்றிதழ் குறித்த சிறு விளக்கத்தை இப்பதிவில் காண்போம்.
PSTM:
தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு TNPSC தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியது. அதில் முதல் கட்டமாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை போன்ற பணியிடங்களுக்கு குரூப் 2,2A தேர்வின் முதல் நிலை தேர்வு கடந்த 21ம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதியுள்ளனர். அதனை தொடந்து கடந்த வாரம் குரூப்2,2A முதல் நிலை தேர்வின் அதிகாரப்பூர்வ விடை குறிப்பு வெளியாகி உள்ளது.
மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு முடிவு! கொரோனா பரவல் எதிரொலி!
மேலும் தேர்வர்கள் உத்தேச விடைகளில் தவறு இருப்பின் மேல் முறையீடு செய்ய ஜூன் 3ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது முதன்மைத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளோரின் மொத்த எண்ணிக்கை 55000 நபர்கள்ஆகும். அதில் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ள தமிழ் வழியில் பயின்றோரின் எண்ணிக்கை 11000 நபர்கள் ஆகும். மேலும் PSTM வழியில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள விண்ணப்பித்த நபர்களின் எண்ணிக்கையில் 7ல் ஒருவருக்கு முதன்மைத் தேர்வு வாய்ப்பு அமையும். அதாவது 80000÷11000= 7.27 என்ற கணக்கீட்டின் படி அமையும்.
Exams Daily Mobile App Download
ஏனைய வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளோர் 800000÷44000=18.18 விண்ணப்பித்த நபரின் எண்ணிக்கையில் பதினெட்டில் (18 ல் 1 )ஒருவருக்கு முதன்மைத் தேர்வு வாய்ப்பு அமையும். 80000 நபர்களுக்கு 1100 பணியிடங்கள் (73 நபர்களில் 1 ஒருவருக்கு பணி ஒருவருக்கு கிடைக்கும். 820000 நபர்களுக்கு 4400 பணியிடங்கள் (186 நபர்களில் ஒருவருக்கு பணி கிடைக்கும். அதன்படி மற்றவர்களுடன் ஒப்பிடும்போது PSTM நபர்களுக்கு பணி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.