கடுப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரசிகர்கள் – அடுத்த திருப்பம் என்ன? எகிறும் எதிர்பார்ப்பு!

0
கடுப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் ரசிகர்கள் - அடுத்த திருப்பம் என்ன? எகிறும் எதிர்பார்ப்பு!
கடுப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் ரசிகர்கள் - அடுத்த திருப்பம் என்ன? எகிறும் எதிர்பார்ப்பு!
கடுப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரசிகர்கள் – அடுத்த திருப்பம் என்ன? எகிறும் எதிர்பார்ப்பு!

விஜய் டிவியில் நெடுந்தொடராக ஆயிரம் எபிசோடுகளை கடந்தும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டு இன்னும் அரைத்த மாவையே அரைப்பது போல் ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதையை ஓயாது ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். சீரியலில் இன்று நடந்த நிகழ்வால் இது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு தானா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. ஏனெனில் கதைகளில் ஒரு ஆர்வமும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழானது போல தெரிகிறது. ஏனென்றால் கதையில் சுவாரசியம் இல்லை, அடுத்து என்ன நடக்கும் என்பதை ப்ரோமோ பார்த்தே தெரிந்து கொள்ள முடிவது போல் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் எப்போது தான் சீரியல் முடிவுக்கு வரும் என்ற கடுப்பில் உள்ளார்கள்.

இரண்டாவது திருமணம் குறித்து சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா சொன்ன விளக்கம் – ரசிகர்கள் ஷாக்!

அந்த வரிசையில் இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த நிகழ்வு ஓட்ட சட்டியில் குதிரையை ஓட்டும் கதையை போல் இருந்தது. அதாவது நேற்றைய எபிசோடின் தொடர்ச்சியாக ஹாஸ்ப்பிட்டலில் இருந்து கதிர், முல்லை மற்றும் தனம் அண்ணியுடன் ஆட்டோவை பொறுமையாக ஓட்டி வீடு வந்து சேர்க்கிறார்கள். 5 லட்சம் செலவு செய்யும் ட்ரீட்மென்ட் முல்லைக்கு தொடங்கியது. இந்த பக்கம் எப்போதும் போல் மீனாவும், ஐஸ்வர்யாவும் சண்டை போடுகிறார்கள்.

ExamsDaily Mobile App Download

அதாவது ஐஸ்வர்யா பாட்டு கேட்க, மீனா சவுண்ட் அதிகமாக இருப்பதாக கூற, அது பாட்டு இல்லை வீடியோ என ஐஸ்வர்யா சண்டைக்கு போகிறார். அதை கவனித்த தனம் அண்ணியும், கண்ணனும் இருவரையும் சமாதானம் செய்ய முயலுகிறார்கள். அப்போது ஒருவொருக்கொருவர் பேசுவதை எல்லாம் பேசிவிட்டு நாங்கள் சண்டையே போடல என்று சொல்லி முடிக்கிறார்கள். அவ்வளவு தான் சண்டை முடிவுக்கு வந்தது. அதன் பிறகு மூர்த்தியும் முல்லையை விசாரித்து விட்டு கிளம்புகிறார். இரவு தூங்கும் போது முல்லை பாத்ரூம் போக வேண்டும் என சொல்ல, கதிரும் தன் மனைவியை அப்படியே தூக்கி செல்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!