இரண்டாவது திருமணம் குறித்து சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா சொன்ன விளக்கம் – ரசிகர்கள் ஷாக்!
தமிழ் சினிமாவில் டாப் கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா தன்னுடைய காதல் கணவரை கடந்த ஆண்டு விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் நாக சைதன்யாவிற்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திக்கு அவரே விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார்
நடிகர் நாக சைதன்யா:
தமிழ் சினிமாவில் தனக்கொரு தனி இடம் பிடித்து முன்னணி நடிகையாக பல ஹீரோக்களுடன் நடித்தவர் நடிகை சமந்தா. அவருக்கு 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது 4 வருட திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிந்து விட்டார்கள். இதை தொடர்ந்து சமந்தா இன்ஸ்டாகிராமில் விவாகரத்து குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன் மூலம் இருவரும் பிரிய இருப்பதாக உறுதியான தகவல் வெளியானது.
முல்லையை கண்டபடி பேசிய மீனா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த திருப்பம்!
காதலித்து பலருக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து வந்த ஜோடியின் பிரிவு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் நாக சைதன்யா விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றம் சென்றபோது ‘பிரிவதால் சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சி தான்’ என தெரிவித்தார். அது குறித்த வீடியோ ஒன்று வைரலானது. இந்நிலையில் நாக சைதன்யா விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ExamsDaily Mobile App Download
இது குறித்து சமந்தா கோவமாக விளக்கம் ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதில் ‘என் அமைதியை அறியாமை என நினைத்துவிடாதீர்கள்’, ‘அன்புக்கும் expiry date இருக்கிறது’ என கூறி இருந்தார். மேலும் நாக சைதன்யா தரப்பில் கூறுகையில் இன்னும் சமந்தாவிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெறவில்லை. அதனால் தற்போது பரவி வரும் செய்தி உண்மையில்லை என தெரிவித்து உள்ளனர். அதனால் ரசிகர்கள் சற்று நிம்மதியில் இருக்கின்றனர்.