மூர்த்தியிடம் கோவப்படும் கதிர், பிரியும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

0
மூர்த்தியிடம் கோவப்படும் கதிர், பிரியும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பம் - ப்ரோமோ ரிலீஸ்!
மூர்த்தியிடம் கோவப்படும் கதிர், பிரியும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பம் - ப்ரோமோ ரிலீஸ்!
மூர்த்தியிடம் கோவப்படும் கதிர், பிரியும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

முல்லைக்காக மட்டும் பல லட்சங்கள் செலவு செய்தீர்கள் என ஜனார்த்தனன் சண்டை போடுகிறார். அனைத்து பிரச்சனையையும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பதால் மூர்த்தியிடம் கதிர் சண்டை போடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லைக்கு சிகிச்சை பார்த்த பணத்தை வைத்து தான் குடும்பத்தினர்கள் அனைவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதாவது முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதால் 5 லட்சம் வரைக்கும் செலவு செய்து குடும்பத்துடன் அனைவரும் முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சையை செய்தார்கள். மருத்துவர்கள் சிகிச்சை செய்வதற்கு முன்பே கண்டிப்பாக இந்த சிகிச்சை வெற்றி பெறுமா என்பது சந்தேகமே என்று கூறிவிட்டு தான் சிகிச்சையை தொடங்கினார்கள்.

புது வீட்டில் குடியேறிய கதிர், முல்லை – ஆதரவு தரும் தனம்! ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் திருப்பம்!

கண்டிப்பாக முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர்கள் தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் வாங்கி, வீடு கட்டும் பிளானையும் பாதிலேயே நிறுத்தி முல்லைக்கு சிகிச்சையை செய்தார்கள். ஆனால் எதிர்பார்த்தபடி முல்லைக்கு வயிற்றில் குழந்தை தங்கவில்லை. மீண்டும் செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சையை செய்ய வேண்டுமானால் 5 லட்சம் செலவு செய்து முதலில் இருந்து சிகிச்சையை தொடங்க வேண்டும். இந்த கடனையே எப்படி அடைப்பது என தெரியாமல் குடும்பத்தவர்கள் திண்டாடிக் கொண்டிருகின்றனர்.

Exams Daily Mobile App Download

முல்லைக்காக மட்டும் குடும்பத்தினர்கள் இவ்வளவு செலவு செய்தது மீனாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவ்வப்போது குடும்பத்தினரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். பின்பு, மீனாவும் மூர்த்தியிடம் செலவுக்கு காசு கேட்கும் போது மூர்த்தி கொடுக்க மறுக்கிறார். இதனால் கடுப்பான மீனா முல்லைக்காக மட்டும் செலவு செய்தீர்கள் என்பதை குத்திக் காட்டுகிறார். பழையபடி மறுபடியும் பிரச்சினை ஆரம்பிக்கிறது. தனம் உடனே தன் கையில் போட்டிருந்த தங்க வளையலை கழட்டி கொடுத்து இந்த பணத்தை மீனாவிடம் கொடுக்கும்படி கூறுகிறார். எங்களால் தானே இவ்வளவு பெரிய பிரச்சனை என கதிர் முல்லையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதைப் பார்த்துக்கொண்டு மூர்த்தி அமைதியாக இருந்ததால் மூர்த்தியிடம் கதிர் கோபப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!