‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் முல்லை காவ்யா – இனி ஆல்யா மானசா என்ட்ரி?
பிரபல சீரியலில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஆயிரம் எபிசோடுகளை கடந்தும் இன்று வரை நல்ல கதைக்களத்துடன் நகர்ந்து மக்களிடத்தில் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் முல்லையாக நடிக்க வந்த காவியா அறிவுமணி வெள்ளித்திரைக்கு செல்லப்போகும் காரணத்தால் அவருக்கு பதிலாக சின்னத்திரை பிரபல நடிகை வரவுள்ளதாக தங்கள் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
நாடகங்களை பொறுத்தவரை அடுத்தவர் குடும்பத்தை கெடுக்க துடிக்கும் வில்லிகள், பரம்பரை எதிரிகள் என்று தான் அரைத்த மாவையே அரைப்பர். அத்தகைய கதைக்களத்துக்கு மத்தியில் குடும்பத்தில் உள்ள நபர்களே பிரச்சனையை உருவாக்கும் புது கதைக்களத்தை கொண்டு 3 வருடங்களை கடந்து அதிக பார்வையாளர்களை கொண்ட சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். மேலும், இந்த சீரீயலுக்கான ஸ்பெஷல் என்னவென்றால் பல மொழிகளில் உருவாகிய தொடர் என்பது தான்.
பாவ்னியிடம் தனது காதலை சொல்லிய அமீர் – வைரலாகும் ப்ரோமோ! ரசிகர்கள் உற்சாகம்!
தற்போது கதைக்களம் முல்லை நோக்கியே நகர்கிறது. அதாவது குழந்தை பிறப்பில் உள்ள குறையை போக்க லட்ச கணக்கில் செலவு செய்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் கடைசியில் அது தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் குடும்பமே ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளதாக கதை ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் சீரியல் குறித்து ஒரு அதிரடி தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. என்னெவென்றால் சீரியல் தொடங்கிய காலத்தில் முல்லையாக விஜே சித்ரா நடித்து வந்தார்.
Exams Daily Mobile App Download
ஆனால் அவரது இறப்புக்கு பிறகு பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய ரோலில் நடித்த காவியா அறிவுமணி முல்லையாக அறிமுகமானார். இவரை முல்லையாக மக்கள் ஏற்றுக்கொள்ளவே நாட்கள் பல ஆனது. காவியா அவரது நடிப்பால் மக்களின் ஆதரவையும், வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். அதனால் தற்போது இரண்டாவது குழந்தை பிறந்து ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிய ஆலியா காவியாவுக்கு பதிலாக முல்லையாக நடிக்க வருகிறார் என்று பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.