கோபியை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லும் செழியன் – ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியலட்சுமி குடும்பத்திலேயே கோபியின் மீது செழியன் தான் அதிக அளவில் நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், தற்போது பாக்கியாவை கோபி ஏமாற்றி விட்டதால் கோபியை செழியன் வீட்டைவிட்டு வெளியே அனுப்பும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபிக்கும் ராதிகாவிற்கு இடையேயான உறவு குடும்பத்தினர் முன்னிலையில் அம்பலமாகி விட்டது. இதற்கு மேலும் கோபி பொய் சொல்லி யாரையும் ஏமாற்ற முடியாது. அதாவது பாக்கியாவிடம் வேறு யாராவது இந்த விஷயத்தை வந்து கூறியிருந்தால் கூட கண்டிப்பாக கோபி மீது சந்தேகப் பட்டிருக்க மாட்டார். ஆனால், கோபியும் ராதிகாவும் கையைப் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்ததை பாக்கியா பார்த்து விட்டார்
கோபியை விட்டு பிரியும் பாக்கியா, அதிர்ச்சியின் உச்சத்தில் குடும்பம் – சீரியலில் அதிரடி திருப்பம்!
மேலும், நீ இல்லை என்றால் செத்து விடுவேன் என கோபி ராதிகாவிடம் கூறிக் கொண்டிருந்த அனைத்தையுமே பாக்கியா பார்த்துவிடுகிறார். இத்துடன், இத்தனை நாட்களாக கோபி மறைத்து மறைத்து வைத்த உண்மை தற்போது வெளிப்பட்டுவிட்டது. இதற்குப் பிறகு பாக்கியாவின் முடிவு என்னவாக இருக்கும் என குடும்பத்தினர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது, கோபியை விட்டு விலகி குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள போகிறாரா அல்லது கோபியையும் ராதிகாவையும் பாக்கியா சேர்த்து வைக்கப் போகிறார் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
மேலும், பாக்கியா மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஈஸ்வரி, செழியன் என அனைவருமே கோபியின் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். தற்போது அனைவரும் நம்பிக்கையும் சுக்குநூறாக உடைந்து விட்டது. இந்நிலையில், தற்போது செழியனும் கோபியை பார்த்து வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். இதற்குப் பிறகும் வீட்டில் உங்களுக்கு இடமில்லை என கோபியை கண்டவாறு செழியன் திட்டமிடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.