ஆன்லைன் மோசடியில் வங்கிக்கணக்கில் இழந்த பணத்தை மீட்கும் நடவடிக்கை – RBI க்கு கடிதம்!
ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளின் போது இழந்த பணத்தை மீட்பதில் இருக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துமாறு ரிசர்வ் வங்கிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு கடிதம் எழுதியுள்ளது.
ஆன்லைன் மோசடி:
இந்தியாவில் வங்கி சேவை அத்தியாவசிய ஒன்றாக உள்ளததால் ஊரடங்கு காலத்திலும் குறிப்பிட்ட நேரம் வரை குறைந்த பணியாளர்களை வைத்து வங்கிகள் செயல்பட்டு வந்தது. வங்கியில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை தவிர்க்க வங்கிகள் இணையதளம் வாயிலாக பணபரிவர்த்தனைரகளை மேற்கொள்ள வங்கிகள் அறிவுறுத்தியது. வங்கி செயலிகளையும் உருவாக்கி அதன் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் போலி இணையதளங்களை உருவாக்கி முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.
மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.3 ரூபாய் குறைப்பு – தேர்தல் எதிரொலி!
மோசடி செய்யும் நபர்கள் வங்கியில் இருந்து பேசுவது போலவும் குறுஞ்செய்தி அனுப்பியும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கி கணக்கு விவரங்களை பெற்று அதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் கையாடல் செய்து விடுகின்றனர். இது குறித்து பணத்தை இழந்தவர்கள் புகாரளித்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளை தடுக்க நடைமுறைகளை எளிமைப்படுத்துமாறு ரிசர்வ் வங்கிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு கடிதம் எழுதியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவ.8 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு!
இது குறித்து குற்றப்பிரிவு எழுதிய கடிதத்தில் வடமாநில சைபர் கொள்ளையர்கள் திருடிய பணத்தை ஆன்லைன் மூலம் அந்தந்த மாநில மின்வாரியத்தில் மின் கட்டணமாக செலுத்தி தரகர்கள் மூலம் ரொக்கமாக பெற்று வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சென்னை காவல்துறை பணத்தை இழந்தவர்கள் புகார் அளித்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னரே வங்கி நிர்வாகம் பணத்தை கொள்ளையர்களிடம் இருந்து முடக்குகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. அதனால் முதல்நிலை காவல் அதிகாரி கையெழுத்திட்டு கடிதம் அனுப்பினாலே, வங்கிகள் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும் வகையில் நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு கடிதத்தில் தெரிவித்துள்ளது.