மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவ.8 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு!
மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் கொரோனா தொற்றின் காரணமாக தடை செய்யப்பட்ட பயோமெட்ரிக் வருகைப்பதிவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பயோமெட்ரிக் வருகைப்பதிவு:
நாடு முழுவதும் கொரோனா பிடியிலிருந்து கடந்த சில மாதங்களாக தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் முன்னர் வருகை பயோமெட்ரிக் மூலமாக பதிவு செய்யப்பட்டு வந்தது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த பயோமெட்ரிக் பதிவு முறை தடை செய்யப்பட்டது. அதாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடுதல், அவர்களின் மூச்சு காற்றை சுவாசிப்பது ஆகியவற்றின் மூலம் மட்டுமே கொரோனா தொற்று பரவுவதாக பொது சுகாதாரத்துறை அறிவித்தது.
TNPSC குரூப் 4 VAO தேர்வு கல்வித்தகுதி, வயது வரம்பு & பணிகள் – முழு விபரம் இதோ!
அதனால் பயோமெட்ரிக் முறையில் ஒருவர் கைரேகை பதிவுக்கு பின்னர் மற்றொருவர் கைரேகை வைப்பதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மட்டுமே இந்த பயோமெட்ரிக் வருகை பதிவு தடை செய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் மீண்டும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
Current Account தொடங்க இருக்கும் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – RBI புதிய விதிகள்!
அனைத்து ஊழியர்களும் பயோமெட்ரிக் பதிவு மேற்கொள்வதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்த வேண்டும். அதற்கு அந்த பயோமெட்ரிக் கருவி அருகில் சானிடைசர் பாட்டில் வைக்க வேண்டும். அலுவலர்கள் அனைத்து நேரமும் முகக்கவசம் அணிந்திருத்தல் அவசியம். பின்னர் வருகைப்பதிவு மேற்கொள்ளும் போது ஒவ்வொருவரும் 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். வருகைப்பதிவின் போது கூட்டத்தை தவிர்க்க கூடுதல் கருவிகள் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக அனைவரும் பாதுகாப்பு நெறிமுறைகளை முறையே கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.