பீட்டர் பாலுடன் விவாகரத்திற்கு பின் வனிதா எடுத்த அதிரடி முடிவு – குவியும் பாராட்டுகள்!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தா மற்றும் வனிதா விஜயகுமார் தங்களது விவாகரத்திற்கு பின் வாழ்க்கையில் முன்னேற எடுத்துள்ள அடுத்தகட்ட திட்டம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சமந்தா மற்றும் வனிதா:
தமிழ் சினிமாவில் தனக்கொரு தனி இடம் பிடித்து முன்னணி நடிகையாக பல ஹீரோக்களுடன் நடித்தவர் நடிகை சமந்தா. அவருக்கு 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது 4 வருட திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிந்து விட்டார்கள். இதை தொடர்ந்து சமந்தா இன்ஸ்டாகிராமில் விவாகரத்து குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக நடிகை வனிதா விஜயகுமார் கமெண்ட் செய்திருந்தார்.
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து உயிருக்கு போராடும் அஞ்சலி – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த ட்விஸ்ட்!
அந்த கமெண்டில் இங்கு சமூகம் என்று எதுவும் இல்லை, கவலைப்படுவதற்கும் எதுவும் இல்லை, உன்னுடைய வாழ்க்கையை நீ சிறப்பாக வாழ் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சமந்தா தனியாக ஒரு காஸ்ட்யூம் கடை நடத்தி வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் பல தொழில்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். அதனால் அவரது கணவர் கொடுத்த ஜீவனாம்சத்தை வேண்டாம் என தொடங்கி விட்டார். அவரது வழியை தொடர்ந்து, வனிதாவும் தற்போது காஸ்ட்யூம் கடையை திறந்துள்ளார்.
தற்போது தீபாவளி நேரம் என்பதால் அவரது கடையில் நன்றாக விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கடையில் வனிதா மற்றும் அவரது அம்மா மஞ்சுளா விஜயகுமார் அணிவது போல் உள்ள உடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் அந்த கடையில் தீபாவளி வரை வனிதா இருப்பார் எனவும் அனைவரும் வாருங்கள் எனவும் கூறியுள்ளார். விமர்சனங்களைத் தாண்டி, விவாகரத்தை தாண்டி நடிகைகள் தங்களது எதிர்காலத்தை முன்னேற்ற அவர்கள் வழி தேடுவது மக்களிடம் நல்ல பாராட்டுகளை பெற்றுள்ளது.