இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து உயிருக்கு போராடும் அஞ்சலி – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த ட்விஸ்ட்!
பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியின் பிரசவத்தின் போது அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பதாகவும் பிறகு நெஞ்சு வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
கடந்த சில எபிசோடுகளாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் பாரதியும் கண்ணம்மாவும் மீண்டும் இணைவது போல காட்டப்பட்டு வருகிறது. இப்படி சுமூகமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் ஒரு புதிய திருப்பம் ஏற்பட இருக்கிறது. அந்த வகையில் இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கர்ப்பமாக இருக்கும் அஞ்சலிக்கு பிரசவத்தின் போது நடைபெறும் விஷயங்கள் குறித்து சில தகவல்கள் சொல்லப்பட்டு வருகிறது.
ஏற்கனவே வெண்பா கொடுத்த மருந்தை பாரதி கொடுத்ததாக நினைத்து அதனை தவறாமல் எடுத்து வருகிறார் அஞ்சலி. ஆனால் அது பாரதி கொடுத்த மருந்து இல்லை என கண்ணம்மா மூலம் அறிந்து கொள்ளும் அஞ்சலிக்கு வெண்பாவின் சூழ்ச்சி புரிகிறது. இதற்கு பின்பாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களத்தில் அஞ்சலிக்கு பிரசவம் நடக்கிறது. பிரசவத்தில் கண்ணம்மாவை போலவே அஞ்சலிக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா ‘வைஷாலி’ வெளியிட்ட திருமண புகைப்படங்கள் – ரசிகர்கள் வாழ்த்து மழை!
எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் குழந்தைகளை பெற்றெடுத்த சந்தோஷத்தில் அஞ்சலி இருக்க திடீரென நெஞ்சு வலி வருகிறது. இதனால் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் அஞ்சலி உயிருக்கு போராடுகிறவாறு சில காட்சிகள் அடுத்தடுத்த எபிசோடுகளில் ஒளிபரப்பாகலாம் என தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தில் அஞ்சலி உயிர் பிழைப்பாரா, வெண்பாவின் சூழ்ச்சி வெளிச்சத்துக்கு வருமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.