ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது எப்படி?
ரேஷன் அட்டைதாரர்களில் குறிப்பிட்ட கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இது குறித்த முழு விபரங்களையும் இப்பதிவில் காணலாம்.
ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு:
நாட்டில் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் சில மத்திய அரசால் நடத்தப்படுகின்றன, சில திட்டங்களை மாநில அரசு நடத்துகிறது. ஆனால் இந்தத் திட்டங்களின் நோக்கம் ஒன்றுதான், அதுதான் நாட்டின் ஏழை மக்களுக்குப் பலன்களை வழங்குவதாகும். அத்தகைய திட்டங்களில் ஒன்று ஆயுஷ்மான் பாரத் யோஜனா. இதன் கீழ் ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக தகுதியுள்ள அனைவருக்கும் ஆயுஷ்மான் அட்டை வழங்கப்பட்டு அரசின் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் மூலம் இலவச சிகிச்சையை பெறலாம்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – இலவச மருத்துவ சிகிச்சை!
அதாவது அந்த்யோதயா ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு இந்த அட்டையை வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது. அந்த கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இத்தகைய கார்டு வழங்கப்படுகிறது. தற்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம்.
மேலும் ஆதரவற்றோர், பழங்குடியினர், ஊனமுற்றோர், நிலமற்றோர், விண்ணப்பதாரர் தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடியினர், தினக்கூலித் தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்தில் சேரலாம். ஆயுஷ்மான் கார்டைப் பெற ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்றிதழ் மற்றும் மொபைல் எண் போன்றவை அவசியம். இந்த திட்டத்தில் சேர அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது பொது சேவை மையத்திலும் விண்ணப்பம் செய்யலாம்.