தமிழக கல்லூரி மாணவிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – பள்ளி கழக வன்னிய குழு வெளியீடு!
தமிழக உயர்கல்வித்துறை கல்லூரிகளில் எங்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் வகையில் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பள்ளி கழக வன்னிய குழு வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு முறைகள்:
இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களின் பாதுகாப்பில் மத்திய மாநில அரசுகள் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. அவர்களது குறைகளை கேட்டு அறியவும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அண்மையில் தமிழகத்தில் மகளிர் கல்லூரி முன்பு மாணவிகளிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக மகளிர் கல்லூரிகளில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி கழக வன்னிய குழு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கல்லூரிகளில் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
Airtel பயனர்கள் கவனத்திற்கு – ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணம் அதிரடி உயர்வு.. 2023 முதல் அமல்!
Download ExamsDaily Mobile App
அதனைத் தொடர்ந்து கல்லூரியில் மாணவிகள் புதிதாக சேரும் போது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் சரியான தொடர்பு எண்ணை வழங்க வேண்டும். மேலும் புதிய கல்விக் கொள்கை 2022 ன் படி பெண்களை தொழில் முனைவராக மாற்றுவதற்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனம் மற்றும் மாணவிகள் தங்கும் விடுதிககளை சுற்றி மதில் சுவர் அமைக்க வேண்டும். அத்துடன் 24 மணி நேரமும் தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகளை மாணவிகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.