தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் முக்கிய ஆவணமாக விளங்கும் ரேஷன் கார்டை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும். என்னென்ன விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டோர்க்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்களை பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசின் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள் வெளி மாநில ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். தற்போது ரேஷன் அட்டை முக்கிய அடையாள ஆவணமாகவும், இருப்பிட சான்றாகவும் ஒப்புக் கொள்ளப்படுகிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 24% HRA திருத்தம் & கூடுதல் சலுகை அறிவிப்பு – அரசு அதிரடி!
இந்த முக்கியமான ரேஷன் அட்டையில் வீட்டு உறுப்பினர்கள், முகவரி, குடும்ப தலைவர் போன்ற விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் தேவை ஏற்பாட்டின் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை நீக்கம் செய்வதும் அவசியம். புதிதாக திருமணமானவர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதே போல் அவர்கள் தங்களின் குழந்தைகளின் பெயரையும் ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும். கணவன், மனைவி இருவரும் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டில் அவர்களது பெயரை முதலில் நீக்க வேண்டும்.
மாநில அரசு ஊழியர்களுக்கு 24% HRA திருத்தம் & கூடுதல் சலுகை அறிவிப்பு – அரசு அதிரடி!
பிறகு ஆதார் அட்டையை ஆவணமாக சமர்பித்து ரேஷன் கார்டில் பெயரை சேர்க்கலாம். முன்பெல்லாம் தாலுகா அலுவலகம் சென்று ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தற்போது அது தேவையில்லை எளிதாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் பெயர் நீக்கம், குடும்ப உறுப்பினர்களின் பெயரை சேர்த்தல் போன்றவைகளை செய்யலாம். குழந்தைகளின் பெயரை சேர்க்க வேண்டுமெனில் பிறப்பு சான்றிதழ் கட்டாயமாகும்.