தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

0
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இதற்கான கால அவகாசம் இம்மாத 13ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் இதில் முதலாம் ஆண்டு பயிலும் பி.எட் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் அவர்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த மார்ச் 14ம் முதல் ஏப்ரல் 13ஆம் தேதி 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜைக் கட்டணம் உயர்வு – பக்தர்கள் அவதி!

இதனை தொடர்ந்து பி.எட் படிப்பில் முதலாம் ஆண்டு முடித்தவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் கொரோனா காரணமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி 16ம் தேதி தான் தேர்வு நடத்தப்பட்டது. அதனால் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அத்துடன் வருகிற 13ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகாது என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதனால் இவர்களால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. மேலும் இது குறித்து அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, தமிழகத்தில் முதலாம் ஆண்டு பயிலும் பி.எட் மாணவர்களால் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.

மேலும் இதற்கு கொரோனா தான் முக்கிய காரணம். எந்த தவறும் செய்யாத மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்படுவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அதனால் தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் அல்லது பி.எட் முதலாம் ஆண்டு மாணவர்களின் வினாத்தாள்கள் விரைவில் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். ஏனெனில் இந்த ஆசிரியர் தகுதி தேர்வு அடுத்து எத்தனை வருடங்களுக்கு பிறகு நடக்கும் என்பது பற்றி உறுதியாக கூற முடியாது. அதனால் அவர்களுக்கு இந்த முறை தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!