புதிய ரே‌ஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!

0
புதிய ரே‌ஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு - புதிய வசதி அறிமுகம்!
புதிய ரே‌ஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு - புதிய வசதி அறிமுகம்!
புதிய ரே‌ஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அமலில் உள்ளது. இந்நிலையில் விண்ணப்பம் ரத்தாவதை தடுத்து மீண்டும் பதிவேற்றம் செய்ய புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு:

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரிசி, பருப்பு, சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு ரேஷன் கார்டு மிகவும் முக்கிய ஆவணமாகும். தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புபவர்கள் உணவுப்பொருள் வழங்கல் துறையின்  www.tnpds.gov.in  இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பயோ மெட்ரிக் தீர்வு காணும் வழிகள் இதோ!

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமான ஒன்றாகும். போதிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எனவே விண்ணப்பம் ரத்து செய்யப்பட்ட பின்பும் மீண்டும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய புதிய வசதி தொடங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி கூறியதாவது, ரே‌ஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் போதிய ஆவணங்களை தாக்கல் செய்யாவிட்டால் ரே‌ஷன் கார்டு விண்ணப்பம் இதுவரை நிராகரிக்கப்பட்டு வந்தது. தற்போது புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளதால் இனி ரே‌ஷன் கார்டு விண்ணப்பம் ரத்து செய்யப்படாது. இதற்காக இணையதளத்தில் ‘மறுபரிசீலனை விண்ணப்பம்’ என்ற புதிய பகுதி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவைப்படும் ஆவணங்கள் பற்றிய விவரம் குறுந்தகவல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும். உட்கர்ஜ்ய் விண்ணப்பிக்கும் போது மொபைல் எண்ணுக்கு அனுப்பிய குறியீட்டு எண்ணை மறுபரிசீலனை விண்ணப்ப பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு – அக்.18 கடைசி நாள்!

அந்த பக்கம் திறக்கப்பட்டதும் செல்போன் எண்ணை பதிவு செய்து ஒருமுறை பாஸ்வேர்டை பதிவிட வேண்டும். அதன் பிறகு அந்த பக்கத்தில் ஏற்கனவே விண்ணப்பித்த விவரங்களையும், மேல் பகுதியில் தேவைப்படும் விவரங்களையும் காட்டும். அதன் அடிப்படையில் தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றி திருத்தங்களை செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரிகள் அதை சரிபார்த்து புதிய ரே‌ஷன் கார்டு வழங்குவார்கள் என அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!