தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பயோ மெட்ரிக் தீர்வு காணும் வழிகள் இதோ!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பயோ மெட்ரிக் தீர்வு காணும் வழிகள் இதோ!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பயோ மெட்ரிக் தீர்வு காணும் வழிகள் இதோ!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பயோ மெட்ரிக் தீர்வு காணும் வழிகள் இதோ!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவாகவில்லை என பல புகார்கள் எழுந்து வருகிறது. அதனை சரி செய்யும் வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

பயோமெட்ரிக் பதிவு:

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன் பெறுகின்றனர். தற்போது 5 வகையான ரேஷன் கார்டுகள் செயலில் உள்ளன. அவற்றில் முன்னுரிமை அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுமார் 1.96 கோடி மக்கள் ரேஷன் அட்டைகளை பெற்றுள்ளனர். இவர்கள் மாதந்தோறும் அரசின் மளிகை பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது குடும்ப அட்டைகள் ஸ்மார்ட் கார்டு வடிவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அக்.12 இல் ஆலோசனை!

மேலும் நியாயவிலை கடையில் பயோமெட்ரிக் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் தற்போது பயோமெட்ரிக் முறையில் தான் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டை இணைத்து உள்ளவர்கள் மட்டுமே பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை வைத்து பொருட்கள் வாங்க முடியும். இந்நிலையில் பலரது கைவிரல் ரேகை பதிவாகவில்லை என்று சமீப காலமாக புகார்கள் எழுந்து வருகிறது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு – அக்.18 கடைசி நாள்!

வயதனாவர்களுக்கு கைவிரல் ரேகைகளில் தேய்வு மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதால் அவர்களின் கைரேகை பதிவாவதில்லை. அதனால் அவர்கள் பயோமெட்ரிக்கை அப்டேட் சேர்வது அவசியம். ஆதார் பயோமெட்ரிக் முறையை நீங்கள் அப்டேட் செய்ய ஆதார் சேவை மையத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய வேண்டும். மேலும் சிலருக்கு ஏதேனும் சில காரணங்களால் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்க முடியாத நிலையில் உள்ளவர்கள், வயதானவர்கள் அவர்களுக்கு பதிலாக குடும்ப உறுப்பினர் வேறு ஒருவரை நியமிக்கலாம்.

  • இதற்கு முதலில் tnpds.com என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அங்கீகார சான்று என்ற ஆப்ஷனை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அந்த விண்ணப்பத்தில் குடும்ப தலைவரின் பெயர் மற்றும் அட்டை எண், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • ரேஷன் கடைக்கு எதனால் நேரில் சென்று பொருட்களை வாங்க முடியாது என்ற காரணத்தை அந்த விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்ட வேண்டும்.
  • வயது முதிர்வு, மாற்றுத்திறனாளி, விபத்து, மருத்துவமனையில் சிகிச்சை போன்ற காரணங்களுக்கு அதற்கான உரிய சான்றிதழை இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.
  • உங்களுக்காக யார் சென்று பொருட்கள் வாங்க உள்ளார்கள், அவர் பெயர், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி உங்கள் ரேஷன் கடைக்கான தாலுகா அலுவலகத்தில் இந்த விண்ணப்பத்தை கொடுத்தால் அவர்கள் அதனை சரிபார்த்து உங்களுக்கு அனுமதி வழங்கி சான்றிதழ் வழங்குவார்கள். இதை வைத்து கொண்டு நீங்கள் ரேஷன் கடைக்கு நேரில் போகமல் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!