தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு – அக்.18 கடைசி நாள்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்து தரப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அதற்கான கடைசி தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு பதிவு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. அதனை தொடர்ந்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கினை அமல்படுத்த உத்தரவிடப்பட்டது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அக்.12 இல் ஆலோசனை!
கொரோனா காலம் என்பதால் மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் சூழல் இல்லாத காரணத்தால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக நடத்தப்பட்ட தேர்வுகளில் மாணவர்களின் மதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
தற்போது 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் வழங்கி வரும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று பள்ளியில் தெரிவிக்க வேண்டும். அக்.18-ம் தேதி வரை அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு நடைபெறும். இப்பணி நடைபெறும் 15 நாட்களும், மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்துகொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.