பொதுமக்களுக்கு மின்வெட்டு தொடர்பான பிரச்சனை – அரசு தரப்பு விளக்கம்!
ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி காரணமாக அணுமின் நிலையங்களின் உற்பத்தி மிகவும் பாதிப்படைந்துள்ளதால் கடுமையான மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும்படி அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மின்வெட்டு:
ஜப்பானில் தற்போது தான் மழைக்காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்கியுள்ளது. அதிலும் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தான் 35 டிகிரி செல்சியஸ் வரைக்கும் வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது. மேலும் ஜப்பானில் வெப்பக் காற்று அதிகமாக வீசி வருவதால் மின்சார தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுமட்டுமல்லாமல் ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி காரணமாக நாட்டின் அணுமின் உற்பத்தி மிகவும் பாதிப்படைந்துள்ளது. மேலும், ஜப்பானின் கோடை காலம் என்பதால் கூடுதலாக மின்சாரத்தின் தேவை அதிகரிப்பதால் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த மின்சார நெருக்கடியை ஓரளவுக்கு சமாளிப்பதற்காக ஜப்பானில் அவ்வப்போது மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்படுகிறது. ஒரு நாளுக்கு மட்டுமே பல மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுவதால் ஜப்பான் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஜப்பான் நாடு முழுவதும் தற்போது இருளிலேயே மூழ்கி கிடக்கிறது. மின்சார நெருக்கடியை சமாளிக்க வேண்டுமெனில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு ஜப்பானிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக கோவில்களிலும் இனி முகக் கவசம் கட்டாயம் – நிர்வாகம் அறிவிப்பு!
இதனையடுத்து ஜப்பான் அரசு,டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் சுமார் மூன்று கோடியே 7 லட்சம் மக்களை வீடுகளில் விளக்கை அணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அணு மின் நிலையங்களில் மின்னணு உற்பத்தி சரியாகும் வரைக்கும் மக்கள் கண்டிப்பாக அரசின் கட்டுப்பாடுகளை மதித்து நடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு அலுவலகங்களில் உள்ள ஜப்பான் ஊழியர்கள் விளக்குகள் அனைத்தையும் அணைத்து விட்டு இருளில் தான் பணியாற்றி வருகின்றனர். தேவைப்படும் நேரங்களில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் ஜப்பான் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.