தமிழக கோவில்களிலும் இனி முகக் கவசம் கட்டாயம் – நிர்வாகம் அறிவிப்பு!

0
தமிழக கோவில்களிலும் இனி முகக் கவசம் கட்டாயம் - நிர்வாகம் அறிவிப்பு!
தமிழக கோவில்களிலும் இனி முகக் கவசம் கட்டாயம் - நிர்வாகம் அறிவிப்பு!
தமிழக கோவில்களிலும் இனி முகக் கவசம் கட்டாயம் – நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

முகக் கவசம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இதனால் மக்களும் இயல்பு நிலை நோக்கி திரும்பி வந்த நிலையில் தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் தாக்கத்தால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 1000 ஐ நெருங்கியுள்ளது. அதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது நான்காம் அலையின் தாக்குதலாக இருக்குமோ என்று அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 400 ஐ கடந்துள்ளது. சென்னையை தொடர்ந்து அதனை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதிகரித்து வரும் தொற்று பரவலை தவிர்க்க தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் பழனி திருக்கோயிலில் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மாவட்ட நலச் சங்கத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – விரைவில் விண்ணப்பியுங்கள்..!

இதனை மீறி முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் துணியாலான முகக்கவசம் வழங்கப்படுகிறது. தற்போது பரவி வரும் பிஏ வைரஸ் தொற்று அதிக வீரியத்துடன் பரவும் அதனால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டால் தொற்று பரவலை தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதனையடுத்து தற்போது அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!