தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பம்பர் பரிசுத்தொகை உறுதி? – அதிகாரிகளுக்கு கடிதம்!
தமிழகத்தில் 2023 பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு வழங்க இருக்கும் பரிசு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசு:
தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அதில், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட கரும்பு, பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, ஏலக்காய் போன்ற அனைத்து பொருட்களும் வழங்கப்படும். இதனுடன் இலவச வேஷ்டி, சேலையும் அளிக்கப்படும். இதனால் ஏழை மக்களும் எந்தவித குறையும் இல்லாமல் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியும்.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையின் போது தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1,000 ரொக்கப்பணம் அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த வருடம் திமுக அரசு பொங்கல் பரிசாக 21 மளிகை பொருட்களை அளித்தது. இவை தரமற்றதாக இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால் வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு ரொக்கப்பணம் அளிக்கும் என்று பலதரப்புகளில் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து அண்மையில் அரசும் ரூ.1000 ரொக்கப்பரிசு பொதுமக்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என கூறி இருந்தது.
தமிழக அரசு போக்குவரத்து துறை ஊழியர்களின் முக்கிய கோரிக்கை – அமைச்சர் அளித்த பதில்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அவர்கள் மாநிலத்தின் அனைத்து கூட்டுறவு அதிகாரிகளுக்கும் தமிழக மக்களின் ரேஷன் அட்டையுடன் வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளது குறித்து கடிதம் எழுதியுள்ளார். அதில்,14,86,000 பேரின் ரேஷன் அட்டையுடன் வங்கி கணக்கு இணைக்கப்படாமல் உள்ளதால், அவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று விவரங்களை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.