தனியார் பள்ளிகளின் பேருந்துகளில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதால் நிலையான சோதனை இயக்க வழிமுறைகளை நடைமுறைப்படுத்த தனியார் பள்ளிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பேருந்துகள் சோதனை:
நாடு முழுவதும் நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சோதனைகளின் போது குர்கான் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் பேருந்துகளை சோதனை செய்வதால் மாணவர்கள் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்படுவதாக தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளது.
அரசின் சோதனை நடவடிக்கைகளுக்கு பள்ளிகள் ஒத்துழைக்க விரும்புவதாகவும், ஆனால் இதன் காரணமாக மாணவர்கள் வெயிலில் நீண்ட நேரம் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நிலையான இயக்க நடைமுறைகளை அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை முறைப்படுத்த ஒரு வார கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.