இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதால் இந்த இரண்டு வங்கிகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதனால் ரூ.15000 வரை மட்டுமே இனி பணம் எடுக்க முடியும்.
வங்கி நடவடிக்கை
இந்தியாவில் உள்ள வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கரைச் சேர்ந்த தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி மற்றும் மும்பையைச் சேர்ந்த சர்வோதயா கூட்டுறவு வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது வங்கிகளின் நிதி நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
தனியார் பள்ளி பேருந்துகள் சோதனை – SOP நடவடிக்கைக்கு ஒப்புதல்!
மேலும் இந்த வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டாலும் தகுதியான டெபாசிட்தாரர்கள் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) அமைப்பிடமிருந்து டெபாசிட் இன்சூரன்ஸ் கிளைம் தொகையாக ரூ.5 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல், சர்வோதயா சககாரி வங்கி மற்றும் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கியில், ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35ஏ-இன் கீழ் இத்தடையானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டெபாசிட்டதாரர்களின் வேறு எந்தக் கணக்கிலும் உள்ள மொத்த இருப்பில் இருந்து 15,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.