தமிழகத்தில் ஜூன் 10ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு!
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூன் 10ம் தேதி கடலூரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான முழு விவரங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
கடந்த 2 வருட காலமாக கொரோனா பொதுமுடக்கத்தால் வெளியூர் சென்று பணி புரிந்தவர்கள் அன்னவரும் வேலையிழந்து மீண்டும் வேலையை தேடி அலைகின்றனர். தற்போது இந்த வருடம் கொரோனா அச்சம் குறைந்த நிலையில் தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலையில்லா திண்டாடத்தை குறைக்க வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன் வந்துள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வில் கேள்விகளுக்கான விடைகளில் தவறு – தேர்வாணையம் பதிலளிக்கும் படி உத்தரவு!
மேலும் தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து வருகிறது. அந்த வகையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 10ம் தேதி நடத்த உள்ளது. இதில் 25 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த முகாம் தாராசுரம் கே.எஸ்.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஜூன் 11ம் தேதி காலை 8.30 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதில் 5-ம் வகுப்பு முதல் டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள், நர்சிங் படித்தவர்கள், பத்தாம் வகுப்பு- பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஏ.என்.எம்., ஜி.என்.எம் டிப்ளமா நர்சிங்,- பி.இ., படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பிடித்த வேலையை பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்கள் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.