TNPSC குரூப் 1 தேர்வில் கேள்விகளுக்கான விடைகளில் தவறு – தேர்வாணையம் பதிலளிக்கும் படி உத்தரவு!

0
TNPSC குரூப் 1 தேர்வில் கேள்விகளுக்கான விடைகளில் தவறு - தேர்வாணையம் பதிலளிக்கும் படி உத்தரவு!
TNPSC குரூப் 1 தேர்வில் கேள்விகளுக்கான விடைகளில் தவறு - தேர்வாணையம் பதிலளிக்கும் படி உத்தரவு!
TNPSC குரூப் 1 தேர்வில் கேள்விகளுக்கான விடைகளில் தவறு – தேர்வாணையம் பதிலளிக்கும் படி உத்தரவு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்குரிய மாதிரி விடைத்தாள்கள் வெளியிடப்பட்டது. ஆனால் இதில் 60 கேள்விகளுக்கான விடைகள் தவறு எனக் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு:

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதனை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியான 75 நாட்களில் வழக்கமாக நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக 1 வருடத்திற்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண் என்ற அடிப்படையில் தேர்வு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூன் 7) மின் தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான மாதிரி விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் பல கேள்விகளுக்கு விடைகள் தவறாக உள்ளதாக தேர்வர்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதனால் இதனை ஆய்வு செய்ய மூவர் கொண்ட குழுவை நியமித்து தவறுகளை கண்டறிய தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆய்வின் முடிவில் சில கேள்வி மற்றும் விடைகள் தான் தவறாக இருந்ததாக தெரிவித்தது. ஆனால் தேர்வர்கள் 60 கேள்விகளுக்கான விடைகள் தவறாக உள்ளதாக இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

Exams Daily Mobile App Download

இந்த வழக்கில் புதிதாக குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவில் ஒரே ஒரு கேள்வி தான் தவறாக உள்ளதாக இக்குழு அறிக்கை வெளியிட்டது. அத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அனைத்து கேள்வி, பதில்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் அரசுக்கு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!