தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதியான நாளை முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தீவிர முன்னேற்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை காரணமாக கடந்த கல்வியாண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டது. மேலும் ஆண்டு இறுதி தேர்வுகள் அனைத்தையும் அரசு ரத்து செய்து மாணவர்கள் தேர்வின்றி பெற்றதாக அறிவித்தது. நடப்பு கல்வி ஆண்டான 2021- 2022ல் ஆன்லைன் வகுப்புகள் ஜூன் மாத நடுப்பகுதியில் தொடங்கியது. தொடர்ந்து கொரோனா 2ம் அலையின் பரவல் அதிகரித்து வந்ததால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.
Wipro நிறுவனத்தில் 1.97 லட்சம் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? புதிய அறிவிப்பு!
இருப்பினும், பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. தமிழகத்திலும் தொற்றின் பாதிப்பு குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு பல கட்ட தீவிர ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்தது. அதன்படி, செப்டம்பர் 1ம் தேதியான நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்புக்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்கள் மட்டுமே சமூக இடைவெளி கொண்டு அமர வைக்கப்பட வேண்டும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு உள்ள 270 பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றும், ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மொத்தம் 6,314 பேரில் நேற்று வரை 4,971 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவர்களுக்கு 31ம் தேதியான இன்று சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.