Wipro நிறுவனத்தில் 1.97 லட்சம் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? புதிய அறிவிப்பு!
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனமான விப்ரோ லிமிடெட், அதன் ஊழியர்களுக்கு இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக சம்பள உயர்வை அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வை பெரும் ஊழியர்களின் தகுதிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு
தற்போது துவங்கியுள்ள புதிய நிதியாண்டில் இந்தியாவை சேர்ந்த பிரபல IT நிறுவனங்கள் புதிய பணியமர்த்தலை அறிவித்து வருகின்றன. வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு இந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல IT சேவை நிறுவனமான விப்ரோ லிமிடெட், அசிஸ்டென்ட் மேனேஜர் மற்றும் அதற்கு கீழே உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அளிப்பதாக அறிவித்துள்ளது.
தமிழக அரசு தொழில்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியீடு – முழு விபரங்கள் இதோ!
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இந்த ஆண்டில் விப்ரோ ஊழியர்கள் பெறும் 2 ஆவது சம்பள உயர்வு இதுவாகும். முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த நிறுவனம் தகுதியான ஊழியர்களுக்கு சம்பள உயர்வை ஏற்படுத்த இருப்பதாக அறிவித்தது. அதன் மூலம் இந்த நிறுவனத்தின் பணியாளர்களில் சுமார் 80 சதவிகிதம் பேர் பெறும் இரண்டாவது ஊதிய உயர்வு என்று விப்ரோ ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனுடன் விப்ரோ நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் 35.6 சதவீதம் உயர்ந்து, அதன் நிகர லாபத்தை ரூ.3,242.6 கோடியாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் தியரி டெலாபோர்டே கூறுகையில், கொரோனா பேரிடர் காலங்களில் மக்கள் செலவில் சில அழுத்தங்கள் இருக்கும் என்று அறிந்ததால், இந்நிறுவனம் தனது ஊழியர்களில் 80% பேருக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார். இதனுடன் இரண்டாவது காலாண்டில் 6,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் கீழ் அடுத்த நிதியாண்டுக்குளாக சுமார் 22,000 பேர் பணியில் இருப்பார்கள் என எதிர்பார்த்துள்ளது.
TN Job “FB Group” Join Now
ஊதிய உயர்வு தொடர்பாக விப்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ‘விப்ரோ நிறுவனத்தின் இன்க்ரிமெண்ட்ஸ் ஆஃப்ஷோர் ஊழியர்களுக்கு ஒற்றை இலக்கத்தில் ஊதிய உயர்வு இருக்கும். அதே நேரத்தில் ஆன்சைட் ஊழியர்களுக்கான ஊதியம் கணிசமாக உயரும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, விப்ரோவின் குறைப்பு விகிதம் 12.1% ஆக இருந்தது. இது கடந்த காலாண்டில் 11% ஆக இருந்தது. தற்போது இந்நிறுவனத்தில் மொத்தம் 1.97 லட்சம் பேர் பணி செய்து வரும் நிலையில் இதில் அதிகளவு ஊழியர்கள் சம்பள உயர்வை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.