தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பள்ளிகளிலும் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் சற்று குறைந்து வந்த நிலையில் கடந்த ஜூன் 14ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2021-2022ம் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஓராண்டு காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாக உள்ளது. இதனால் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Jio, Airtel & Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்!
இதனை தொடர்ந்து பள்ளிகள் திறப்பின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்கும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்படுவதால் பெற்றோர்கள் மத்தியில் சற்று அச்சமும் நிலவி வருகிறது. மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த சூழ்நிலையில் மாணவர்களின் நலன் முக்கியமானதாகும்.
TN Job “FB Group” Join Now
அதனால் பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. அதன்படி வகுப்பறைகளில் மாணவர்களின் இருக்கைகள் சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும். மாணவர்கள் கூட்டம் கூடாதவாறு ஒவ்வொரு வகுப்புகளுக்கும் இடைவேளை நேரத்தை மாற்றுதல் பள்ளிக்குள் நுழைவதற்கு முன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்பநிலையை கண்காணிக்க வேண்டும் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.