தமிழகத்தில் தொடர் விடுமுறைக்கான ஏற்பாடுகள் தீவிரம் – மக்களுக்கு அரசு செய்துள்ள தரமான சம்பவம்!

0
தமிழகத்தில் தொடர் விடுமுறைக்கான ஏற்பாடுகள் தீவிரம் - மக்களுக்கு அரசு செய்துள்ள தரமான சம்பவம்!
தமிழகத்தில் தொடர் விடுமுறைக்கான ஏற்பாடுகள் தீவிரம் - மக்களுக்கு அரசு செய்துள்ள தரமான சம்பவம்!
தமிழகத்தில் தொடர் விடுமுறைக்கான ஏற்பாடுகள் தீவிரம் – மக்களுக்கு அரசு செய்துள்ள தரமான சம்பவம்!

தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி முதல் ஆயுத பூஜை மற்றும் காலாண்டு தேர்வு முடிந்து தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட உள்ளது. இதனால் தமிழக அரசு தொடர் விடுமுறைக்கான பணிகளை ஆயத்த படுத்த தொடங்கியுள்ளது.

சிறப்பு பேருந்துகள்:

பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை என்றாலே அனைவருக்கும் ஒரே குஷி தான் ஏற்படுகிறது. காரணம் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தான். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டு தொடங்கி தற்போது வரும் செப்டம்பர் மாத இறுதியில் தான் தொடர் விடுமுறை வர உள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது போன்ற தொடர் விடுமுறை காலங்களில் அரசு பேருந்துகளில் போதிய எண்ணிக்கை இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்படும்.

போலீசில் வசமாக சிக்கிய கோபி.. திருமணம் நடக்குமா? – பாக்கியலட்சுமி சீரியல் அதிரடி டிவிஸ்ட்!

இதனால், தனியார் பேருந்து நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்வார்கள். இதனை தடுக்கும் விதமாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் வர இருக்கும் ஆயுதபூஜை தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து 30.09.2022, 01.10.2022 ஆகிய தேதிகளில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளார். பேருந்துகள் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

பேருந்து விவரங்கள்:

  • தாம்பரம் மெப்ஸ் (MEPZ) பேருந்து நிறுத்தம் – திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள், மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
  • பூவிருந்தவல்லி பைபாஸ் (மா.போ.க. பூவிருந்தவல்லிபணிமனை அருகில்) – வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.
  • கோயம்பேடு பேருந்து நிலையம் – மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ECR), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர்).

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!