போலீசில் வசமாக சிக்கிய கோபி.. திருமணம் நடக்குமா? – பாக்கியலட்சுமி சீரியல் அதிரடி டிவிஸ்ட்!
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மற்றும் கோபிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், தொடரில் எதிர்பாராத திருப்பம் ஒன்று நடக்கிறது. இதனால் கோபிக்கு ராதிகாவுடன் திருமணம் நடக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
கோபி- ராதிகா திருமணம்:
கோபி தனது குடும்பத்தில் உள்ள யாருக்கும் தெரியாமல் பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து வாங்கி, ராதிகாவை திருமணம் செய்து கொள்ள நினைத்தார். ஆனால், கோபிக்கு ஷாக் அடித்தது போல் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கோபியின் சுயரூபம் தெரிந்து விட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத கோபி வழக்கம் போல் ஏதோ அசட்டு காரணங்களை சொல்லி சமாளிக்க நினைத்தார். ஆனால், பாக்கியா கோபி சொல்லும் எதையும் நம்ப தயாராக இல்லை.
இது தான் சாக்கு என்று கோபி வீட்டை விட்டு வெளியில் வந்து ராதிகாவுடன் திருமணத்திற்கு தயாராகி விட்டார். ஆனால், இனியா மற்றும் செழியனிடம் அவர்களை நினைத்து உருகுவதாக கூறி வருகிறார். மேலும், கோபியின் திருமணம் பற்றி ஈஸ்வரி அம்மாவிற்கு தெரிந்து விட்டது. அவர் இந்த திருமணத்தை கோபி செய்து கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து விஜய் டிவி வெளியிட்ட ட்வீட் – கடுப்பான ரசிகர்கள்!
Exams Daily Mobile App Download
இன்னொரு புறம், கோபி இனியாவிற்கு புதிதாக டிரஸ் வாங்கி கொடுக்கிறார். கோபி திருமணத்திற்காக தான் இனியாவிற்கு புது டிரஸ் வாங்கி கொடுத்திருப்பார் என்று தாத்தாவும். பாட்டியும் கவலைப்படுகின்றனர். மேலும், திருமணத்தை நிறுத்த என்ன செய்வது என்று ஈஸ்வரி புலம்பிக் கொண்டிருக்கிறார். அப்போது ராமமூர்த்தி தாத்தா பொறுமையாக இரு, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார். அவர் என்ன செய்ய போகிறார் என்று எதிர்பார்த்து வரும் நிலையில், கோபியின் திருமணம் பற்றி ராமமூர்த்தி போலீசில் புகார் அளிக்கிறார். இதனால் கோபியை போலீசார் வந்து விசாரணை செய்ய உள்ளனர். இந்த காட்சிகள் இனிவரும் எபிசோடில் காட்டப்பட உள்ளன.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்