சென்னையில் மழை நீர் தேக்கத்தை தடுக்க வல்லுநர் குழு அமைப்பு – தமிழக அரசு உத்தரவு!

0
சென்னையில் மழை நீர் தேக்கத்தை தடுக்க வல்லுநர் குழு அமைப்பு - தமிழக அரசு உத்தரவு!
சென்னையில் மழை நீர் தேக்கத்தை தடுக்க வல்லுநர் குழு அமைப்பு - தமிழக அரசு உத்தரவு!
சென்னையில் மழை நீர் தேக்கத்தை தடுக்க வல்லுநர் குழு அமைப்பு – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நீர் தேங்குவதை தடுப்பதற்கும் ஆலோசனை வழங்கவும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வல்லுநர் குழு:

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்து வரும் அதிக கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தலைநகர் சென்னையில் ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏரிகள் நிறைந்து தண்ணீர் முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை நீர் செல்ல கூடிய பாதைகள் அடைபட்டிருப்பதால் தண்ணீர் வெளியே போகாமல் அங்கங்கே தங்கியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்வு – சூப்பர் அறிவிப்பு!

பொதுமக்கள் பேரிடர் மீட்பு உதவியுடன் படகுகள் மூலம் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். தியாகராஜர் நகர், கோடம்பாக்கம், அண்ணா சாலை, வியாசர்பாடி போன்ற நகர்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்துள்ளதால் தற்போதைய கால நிலையில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தண்ணீரில் வாகனங்கள் செல்ல முடியாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் அரசு மழை நீர் தேங்குவதை தடுப்பதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட்டது.

PF கணக்கில் 8.50% வட்டி – EPFO சந்தாதாரர்கள் சரிபார்க்கும் எளிய வழிமுறைகள் இதோ!

இதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் எங்கெல்லாம் மழைநீர் தேங்குகிறது. அதனை அகற்றும் வழி என்ன என்பது பற்றி வல்லுநர் குழு ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று இக்குழுவிற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டு திட்டமிடல் அமைப்பின் தலைமை அதிகாரி, மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!